கைதான தாய்மார்கள் அடையாள அணிவகுப்பில்

367 0

1467811650_6385156_hirunews_Palitha-Thewarapperumaமத்துகம – மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 9 தாய்மார்களும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதற்காக அவர்கள் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தங்களின் பிள்ளைகளை பாடசாலையில இணைத்துக் கொள்ளுமாறு பலவந்தப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் 9 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தியதுடன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டமைக்காக பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.