கட்டண சீராக்கல் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின் தீர்வு

398 0

be0a02c3929d386bbfee80169a2d1548_XLபேருந்து கட்டண சீராக்கம் தொடர்பான தீர்மானம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று சந்திப்பினை நடத்தி இருந்தார்.

இதன்போது இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அத்துடன், பேருந்து கட்டணம் குறித்து ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க பிரதிநிதிகள் தங்களின் யோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த யோசனைகளை கருத்தில் கொண்டு அமைச்சரவை பேருந்து கட்டணம் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.