கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு

298 0

kkkkkkkkkkkkkகிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

அத்துடன், 20 நாட்கள் கட்டாய சமுக சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கடந்த 9ஆம் திகதி இரண்டாயிரத்து 50 மில்லிக்கிறாம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

இதேவேளை கனகபுரம் பகுதியில் கடந்த  9ஆம் திகதி 490 மில்லிக்கிறாம் கஞ்சா வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது, இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.