இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம் – ஹரித அளுத்கே

209 0

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் .

மேலும் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த நாட்களாக குறைவடைந்துள்ள போதும் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் கொழும்பு நகர பகுதியில் தொற்று நிலைமை குறைவடைந்திருந்தாலும், வெளிமாவட்டங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகின்றதோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன எனவும் இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.