செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றபட்டது  (காணொளி)

304 0

kanயாழ்ப்பாணம் செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று மதியம் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட பொலிஸ் அணியினர் செம்மணிச் சுடலையிலிருந்து 15 கிலோ கஞ்சாவை பொதியிடப்பட்ட நிலையில் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்துவதற்கேற்ப செம்மணிச் சுடலையில் கஞ்சா மறைத்துவைத்திருக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதே நிலையில் வடமராட்சி கிழக்கு குடத்தனை சுடலையிலிருந்தும் 16 கிலோகிராம் கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுளளன.

மீட்கப்பட்ட கஞ்சா எட்டுப் பாசல்களாக ஒவ்வொன்றும் தலா 2 கிலோகிராம் நிறையுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.