சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 3,180 பேர் கைது!

197 0

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியத் தவறிய குற்றச்சாட்டுக்கே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 3,180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த இன்றைய தினம், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.