சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!

182 0

காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்டி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டு பிடித்ததை தொடர்ந்து பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்துள்ளனர்

சிறுமி கர்ப்பம் தரிக்கும் போது 15 வயது எனவும் தற்போது தற்போது 16 வயதும் 1 மாதம் எனவும் 7 மாத கர்பணியாக இருப்பதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.