தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வைகாசி மாதத்திற்குள் நிறைவடையும்-பிரசன்ன ரணதுங்க

203 0

இலங்கையில் எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறைவு செய்யும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர், கொரோனா ஆபத்து இன்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கை மாறும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவினால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.