துன்புறுத்தல்களுக்குள்ளான 288 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

218 0

சவூதி அரேபியாவில் இருந்து 288 இலங்கையர்கள் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பணிகளுக்காக சவூதி அரேபியா சென்று அந்த நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 288 இலங்கை யர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத் திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கையர்களைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

சவூதி அரேபியாவின் ரியாத் நாட்டிலிருந்து வருகை தந்த வர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணிப்பெண் களாகச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.