கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டகளில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முக்கிய அறிவித்தல்

205 0

கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாட சாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக் கவுள்ளது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி வித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசா லைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசா லைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நட வடிக்கை களுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண் டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண் மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.