உந்துருளி விபத்தில் ஒருவர் பலி!

169 0

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

வாழைச்சேனை பகுதியில் இருந்து ஏறாவூர் பகுதியை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று அங்குள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்ல முற்பட்ட போது, அதன் பின்னால் பயணித்த உந்துருளி ஒன்று மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

அத்துடன் மற்றொரு உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில், செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்