வீதி விபத்துகளில் சிக்கி நேற்றைய தினம் 14 பேர் பலி – அஜித் ரோஹண

199 0

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதில் 09 பேர் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய 05 பேரும் அண்மையில் நிகழ்ந்த வாகன விபத்துகளால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் வீதிகளில் வாகனம் செலுத்தும் போது வீதி சட்டத்துக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.