கேகாலையில் இரண்டு மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து…!

284 0

கேகாலை பிரதேசத்தின் இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கலிகமுவ அரந்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கலிகமுவ பிரதேச சபை மற்றும் மாவனெல்ல பிரதேச சபை ஆகியவை தீப்பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த கிட்டத்தட்ட 20 மில்லியன் பெறுமதியான பொருட்கள் தீ விபத்தால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து பிந்தெனிய காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆமேற்கொண்டுள்ளது.