சென்னையில் பரவலாக மழை: 180 கி.மீ. தொலைவில் வார்தா புயல்

266 0

201612120739374985_raining-in-chennai-varthag-coming-near-180-km_secvpfசென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வார்தா புயல் 180 தொலைவில் மையம் கொண்டுள்ளது.தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வார்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நாளை மதியத்திற்கு மேல் கரையை கடக்க உள்ளது.
வார்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

அடுத்த 36 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் 40-50 கி.மீ. ஆக இருக்கும்.