பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று (17) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றது