கிளிநொச்சி பூநகரியில் குடும்பப் பெண் கொலை

229 0
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (17) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 30 வயதுடைய என பொலிஸார் அடையாளங்கண்டிருப்பதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.