இந்திய மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு இன்று 5 மணிநேரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஸ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் 7ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுஸ்மாவுக்கு 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் மத்திய மந்திரி சுஸ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக அளிக்க பொதுமக்களில் பலர் ஆர்வம்காட்டி வந்தனர்.
இந்நிலையில், அவரது உடலுக்கு பொருந்தக்கூடிய வகையில் சிறுநீரகம் கிடைத்ததால் இன்று சுஸ்மாவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஸன் இடம்பெற்றது.

