யாழில் ஆசிரியர் உட்பட இருவருக்கு கொரோனா

227 0

யாழ். மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் பண்டாரவளையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இந்த ஆசிரியர் கடந்த 23ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார். புலோலியில் அண்மையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இளைஞருடன் தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் இந்த ஆசிரியரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.