இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

243 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும், காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும வெல்ம்ப்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவரும் மற்றும் ஓபநாயக்க பிரதேசததை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.