சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறில் நீடிப்பு

416 0

sajin_vass_001-436x325வர்த்தகர் ஒருவரை பலவந்தப்படுத்தி அவரிடம் இருந்து சுமார் 61 கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவர் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை அவன்காட் கப்பல் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரேன் நாட்டு கப்பல் தலைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Leave a comment