யோசிதவிடம் இன்றும் விசாரணை

402 0

yositha-41-720x480மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ, இன்று 15வது தடவையாகவும், நிதிமோசடி தொடர்பான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

தனிப்பட்ட சொத்து சேர்ப்பு மற்றும் சி எஸ் என் தொலைக்காட்சி சேவை தொடர்பான விசாரணையின் நிமிர்த்தம் அவர் இன்றும் முன்னிலையானார்.

இது தொடர்பில், இவரிடம் நேற்றைய தினமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊடல் மற்றும் மோசடி தொடர்பில், சாட்சி மற்றும் விசாரணையின் பொருட்டு 14 பேர் இன்றைய தினம் நிதிமோசடி தொடர்பான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment