அரசியலமைப்பு திட்டமிடல் செயல்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை பாராளுமன்ற கட்டிடதத் தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, லொஹான் ரத்வத்த, செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

