அப்துல் ராசிக் பிணையில் விடுதலை

253 0

201612090542444085_10-indians-gets-capital-punishment-in-pakistan-for-killing_secvpfமத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை வௌியிட்டால் வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.