ஹுசைன் அறிக்கைக்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

427 0

0027-08-111இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை, முக்கியபுலம்பெயர் அமைப்பான உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் திகதி ஜெனீவா மாநாட்டில் வைத்து அந்த இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாதுள்ளமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையை தாங்கள் வரவேற்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment