புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

414 0

arrest-slk.polce_2வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வவுனியா, களுத்துறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் பெறுமதி கொண்;ட வனப்பகுதிகளில் இருந்து தோண்டப்படும் பொருட்களை, அவர்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் உந்துருளி ஆகியன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a comment