சிறிலங்காவில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு!

200 0

சிறிலங்காவில் இன்று மட்டும் 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 228ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 686 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 30 ஆயிரத்து 568 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 475 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.