தொடரும் யேர்மனிவாழ் தமிழ் மக்களின் புரேவிப் புயல் பாதிப்பு நிவாரணங்கள்.

1015 0

யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் புரேவி புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வளங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களைச் சேகரித்து உடனடியாக அவர்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கான செயற்பாடுகளில் போராளிகளும் மக்களும் இணைந்து செயற்படுகின்றார்கள்.
இந்த உதவிகளை வீரியப்படுத்துவதற்காக யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.

வல்வவட்டித்துறை ஆதிரகாயிலடிறயச் சேர்ந்த 58 குடும்பங்களுக்கு  யேர்மனி வாழ் தமிழுைவுகளின் நிதிப்பங்களிப்பில் வழங்கிறவக்கப்பட்டது.

 

புதுக்குடியிருப்பு, கைவேலி ,தேவிபுரம் ,கொக்குத்தெடுவாய் மக்களுக்கு வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் போரதீவு பற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு யேர்மனியில் உள்ள எமது உறவுகளால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

VTO

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த 40 குடும்பங்களுக்கும் மாங்குளம் கற்குவாறி பிரதேசத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கும் உலர்உணவுப்பொதிகள் ஜேர்மன் தமிழ் மக்களின் நிதியுதவி யில் 23/12/2020 இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வடமராட்சி கிழக்கில் உடுத்துறை வட்டாரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.