பேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் -கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

283 0

1094666113court2பேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபரான குறித்த 26 வயது இளைஞர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், பிறிதொரு இணையப் பக்கத்தில் இருந்த தகவலையே பதிவு செய்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாக, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 15ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அன்றையதினமே விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரியப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.