யாழின் இன்றைய அபாய நிலைக்கு மக்களுடைய ஒத்துழைப்பு இன்மையே காரணம் – வடமாகாண ஆளுநர் விசனம்

296 0

வடமாகாணம் கொரோனா தொற்று அபாயத்தில் இருப்பதற்கு காரணம் மக்களுடைய ஒத்துழைப்பு இன்மையே காரணம் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து எமது மாகாணத்திற்குள் நுழைந்தவர்கள் தொடர்பான தகவல்களை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம் எனவும் ஆளுநர் விசனம் வெளியிட்டுள்ளார்.

சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவிறுத்தியிருந்தபோதும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் தகவல்களை வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், குறித்த இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.