யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் – சம்பந்தன் கூறியதாக கெஹலிய தெரிவிப்பு

269 0

images-1யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தன்னிடம் கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.

வரவு – செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் வைத்து இரா.சம்பந்தனை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியதாக கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

இதனிடையே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி அன்று நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த போது எந்த ஒரு அமைச்சர்களும் கருத்துகளை வெளிப்படுத்தவில்லை.

எனினும், தற்போது வீண் வாதங்களை வெளிப்படுத்தி வருவதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.