210 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

215 0

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 210 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 80 பேர், கனடாவிலிருந்து 130 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.