புதுவருட கொண்டாட்டங்கள் குறித்து அஜித் ரோஹண தெரிவித்தது என்ன?

242 0

கொரோனா தொற்று காரணமாக, புதுவருட கொண்டாட் டங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே கலந்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கடந்த வருடங்களை போன்று இம்முறை கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த முடியாது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாகச் செயற் படுமாறும் அத்தோடு இம்முறை புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர் களுடன் மாத்திரமே கலந்துகொள்ளுமாறு அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்