பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க அனுமதி

261 0

1510662762untitled-1பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வயது வந்த மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்கும் செயல்திட்டத்தின் கீழ் தற்போது 1,019 பேருக்கு வருடாந்தம் 5,000 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது.

தற்கால அபிவிருத்தி சூழ்நிலையினை கருத்திற் கொண்டு குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களுக்காக வருடாந்தம் கொடுக்கப்படும் 5,000 ரூபா உதவித் தொகையினை, 2017ம் ஆண்டினுள் 10,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

மேலும், குறித்த உதவித் தொகையைப் பெறும் கலைஞர்களின் எண்ணிக்கையினை 5,000 வரை அதிகரிப்பதற்கும் அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.