காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்

202 0

காலி கல்வி வலயத்திற்குட்படட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் பரவல் அவதான நிலையை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.