மகனுக்கு உரிமை கோரும் இரு தாய்மார் வழக்கு ஒத்திவைப்பு

159 0

சுனாமியில் காணாமல் போன மகனுக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் வழக்கு, சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் நேற்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், வழக்கு ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு ஒக்கப்பட்டுள்ளது.

மகனுக்காக ஏங்கும் இரு தாய்மார்களும் நீதிமன்றத்துக்கு வருகை தந்ததுடன் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனையை (DNA) நேற்று (08) மேற்கொள்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மரபணு பரிசோதனை தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்த சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி, வழக்கை ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.