சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

292 0

சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 285 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 77 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 590ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 370 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 20 ஆயிரத்து 460 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 993 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 137 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.