கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் -சுதத் சமரசிங்க

313 0

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்குப் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட வைத் தியர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப் பில் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை யிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப் பகுதி களில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங் களில் ஏழுமாறாகத் தெரிவு செய்யப்படுபவர்களா வர்.

இந்த பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக் களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர்.

பின்னர் அவர்களின் தகவல்களை ஆராயும்போது, தற்போதைய கொத்தணிகளுடன் பெரும் பாலா னோருக்குத் தொடர்புள்ளமை தெரியவருகிறது.

எனவே, தற்போது கொரோனா தொற்று பரவல் நிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது.

கொரோனா தொற்று பரவலை முழுமையாகக் கட் டுப்படுத்த அரசாங்கத்தின் ஊடாக ஏதாவது தலை யீடு அவசிய மாகும் என்பதுடன் அதற்கு சமாந் தரமாக பொதுமக்களின் தலையீடு அவசியமாகும் என்றும் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வரையில் கொரோனா தொற்றுக்கான பொதுவான தடுப்பூசி ஒன்று உறுதிப்படுத்தப் படவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.

 

பிரித்தானியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தடுப் பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறி யகக் கூடியதாக உள்ளது.

எனினும், உலகில் தற்போது வரையில் பொதுவாகத் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எந்தவொரு தடுப்பூசியும் ஏதாவது ஒரு வகையில் உறுதிப் படுத்தப்படவில்லை.

அத்துடன், அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன், தற்போதும் சில தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத் திலேயே உள்ளன.

குறித்த ஆய்வுகள் வெகுவிரைவில் நிறைவடைந்து.

அது குறித்த தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப் படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் விசேட வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டின் நடுப்பகுதி அளவில், பொது பயன் பாட்டுக்காக ஏதாவது ஒரு தடுப்பூசி தயாராகும் என் பது உலக சுகாதார ஸ்தாபனத்தினதும், தங்களின தும் மதிப்பீடாகும் என்றும் அவர் தெரி வித்தார்.