வீட்டிலிருந்து தம்பதி சடமாக மீட்பு

197 0

மினுவாங்கொட ஓபாத பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் – மனைவி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் கணவன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த மனைவி 37 வயதுடையவர் என்றும் கணவனுக்கு 45 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.