கிளி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் பலி

292 0

body-copyகிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்திற்கு இரு சகோதரிகள் மற்றும் இருவர் உட்பட நான்குபேர் இன்று பிற்பகல் குளத்தினைப் பர்க்கச்சென்று மீன்பிடிப்படகில் சென்றதாகவும், பின்னர் கரைக்குத்திரும்பி கரையில் இறங்கி நின்;று குளத்தினைப் பார்த்த சமயம் குளத்தில் தவறி வீழ்ந்து இரு சகோதரிகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரது சடலங்களும் கிளிநொச்சி அக்கராயன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 17 வயதுடைய சகோதரி ஒருவர் இரண்டு மாதங்களிற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது கணவர் மற்றும் அவரது சகோதரி அத்துடன் அப்;பகுதியைச் சேர்ந்த சிறுவர் ஒருவன்  உட்பட நான்கு  பேர் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இரகுநாதன் தர்சினி வயது 19 இரகுநாதன் பிரியா 17 ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி  அக்கராயன் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.