ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி காட்டிக் கொடுத்து விட்டு எவ்வாறு கொள்கைகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது பிளவுபட அது ஒரு பெயர் பலகை இல்லை என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தாம் கட்சியை பிளவுபடுத்துவதாக சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.