யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி(காணொளி)

393 0

 

new-picture-1யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டனர்.

அனுதாப புத்தகத்தில் அனுதாபத்தை தெரிவிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரதி அவைத்தலைவர் கே.வி.கமலேஸ்வரன், வடக்கு விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன், வடக்கு மீன்பிடி அமைச்சர் பி.டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.