புதிய தம்பதிக்கு கொரோனா

233 0

மாவனெல்ல நகரில், கடந்த மாதம் 9ஆம் திகதி திருமணம் முடித்த புதிய ஜோடிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த திருமண நிகழ்வில் 120 பேர் வரை பங்குப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்வு முதல் நாள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்டிருந்தாலும் இரண்டாவது நாள் எவ்வித சுகாதார பாதுகாப்புமின்றி நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணமகன் கொழும்பு பிரதேச பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றுவதாகவும் அந்த திருமண நிகழ்வில் கொழும்பிலிருந்து பலர் கலந்துகொண்டதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தில் இதுவரை 151 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.