நேரடி ஒளிபரப்பின்போது ஊடகவியளாளரின் தொலைபேசியைப் பறித்துச் சென்ற திருடன்!

220 0

ஆர்ஜென்டினாவில்  (Argentina) நேரடி ஒளிபரப்பின்போது ஊடகவியளாளரொருவரின் தொலைபேசியை திருடனொருவன்  பறித்துச்சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஆர்ஜென்டினாவில் சரண்டி நகரில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த டியாகோ டெமார்கோ(Diego Demarco) என்ற ஊடகவியளாளரின் தொலைபேசியைத்  திருடனொருவன்  பறித்துச்சென்ற சம்பவம் கெமராவில்  பதிவாகியது.

இதனையடுத்து இச் சம்பவத்தை குறித்த தொலைக்காட்சி நிறுவனம் சமூகவலைதளங்களில் பகிர்ந்த நிலையில், வீடியோ வைரலானது.

தொலைபேசி பறிப்பு நடந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், இக்  காட்சியை பார்த்து திருடனை அடையாளம் கண்டறிந்ததன் மூலம் தனது தொலைபேசியானது மீண்டும்  கிடைக்கப்பெற்றதாக டியாகோ டெமார்கோ தெரிவித்துள்ளார்.