அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந் நிலையில் குறித்த தேர்தலுக்கு முன்னர், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி தயாராகி விடும் என்ற ட்ரம்பின் ஆசை கானல் நீராக மாறியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்காவின் பைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஜெர்மனியின் பயோ-என்-டெக்நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி பரிசோதனை இன்னும், முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதுதொடர்பாக பேசிய பைசர் நிறுவனம், தங்களது தடுப்பூசி மருந்தின், அண்மைகால பரிசோதனை முடிவுகள் குறித்த தரவுகளை வெளியிட இயலவில்லை எனக் கூறியிருக்கிறது.
இதனால், ஆற்றாமையில் தவிக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்கள், இவ்வாண்டின் இறுதிக்குள், தடுப்பூசி கிடைக்கும் என பிரசாரம் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.