அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ கடந்த இருமாதங்களாக எரிந்து வருகிறது.இதுவரை 40 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு நெருப்பில் சிக்கி அழிந்துபோன நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகளும், 31 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இப்பகுதியிலிருந்து வெளியேறும் அடர்த்தியான கறுப்புப் புகை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதுடன், மக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

