இந்திய மீனவர்கள் 5 பேர் யாழில் கரையொதுங்கினர்

363 0

9-indian-fisermen-arrestedநாடா புயலின் தாக்கத்தினால் அதிகரித்துள்ள கடும் காற்றினால் திசைமாறிச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
திசைமாறிச் சென்ற அவர்கள் தமது படகில் எரிபொருள் நிறைவடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வந்து கரையொதுங்கியுள்ளனர்.
இந்திய தமிழ் நாட்டில் இருந்து ஒரு படகில் புறப்பட்ட 5 மீனவர்களே இவ்வாறு கரையோதுங்கியுள்ளனர்
கரையொதுங்கிய மீனவர்கள் கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை சீரடைந்த பின்னர் அவர்களை இந்தியாவிற்க அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.