இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2016ம் ஆண்டு மாவீரர் தினம்

527 0

15இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி மற்றும் லெச்சே மாநிலங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் 27.11.2016 அன்று இடம்பெற்றது
முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது பின் 2016 ம் ஆண்டிற்க்கான மாவீரர் தின உரையின் ஒலி வடிவம் ஒலிபரப்பப்பட்டது அடுத்து அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க மாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அடுத்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன தொடர்ந்து திலீபன் தமிழ் சோலை மாணவர்கள் பங்கேற்ற பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது தொடர்ந்து யேர்மன் நாட்டில் இருந்து வந்த தமிழ் தேசிய உணர்வாளரின் சிறப்பு உரை காலத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்தது.

இறுதியில் உறுதி மொழியைத் தொடர்ந்து தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது இவ்வாண்டும் பல இடர்பாடுகள் மத்தியிலும் நீண்ட தூரப்பிரதேசங்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் உணர்வுடன் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

20 21 22 23 24 25 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 l na na