ஐ.எஸ். குறித்து அமெரிக்கா கவலை

389 0

isis-78778dஇந்தோ-பசுவிக் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று ஆரம்பமான காலி பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி ஹரி பி ஹரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது அமெரிக்காவை கவலைக் கொள்ள செய்துள்ளது.

இதனை தடுப்பதற்கு இந்தோ-பசுவிக் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக கடல் எல்லை பாதுகாப்பு மேம்படுத்தல் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு தகவல் தொடர்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.