இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் ஆளுநர் நிலைக்கு பொருத்தமானவர் என்று பிரதமர் ரணில் விக்கரம சிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பவர், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த நியமனம் பொருத்தமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தபோது அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட பிரதமர் ரணில், ச்சரித்த ரத்வத்தையை இடைக்கால ஆளுநராக நியமிக்கக்கோரினார்.
இது தொடர்பில் அவர் கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இதற்கு காரணம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை கோப் நாடாளுமன்ற குழு நிரூபிக்கமுடியாதநிலையில் மஹேந்திரனை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கும் நோக்கிலேயே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
எனினும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்குள் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை உடனடியாக நாடு திரும்புமாறு ரணில் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் இன்று அவர் நாடு திரும்பவிருந்தபோதும் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி இணக்கத்துடன் நியமிக்கப்பட்டமையை அடுத்து அவர் உடனடியாக நாடு திரும்ப அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

