ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படைத்தரப்பினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் இதனை தெரிவித்தார்.
இந்த தாக்குதலின்போது, இரண்டு இலங்கையர்களும் பணயகைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சியிடம் வினவப்பட்டது.
இலங்கைக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் இருப்பது தொடர்பில் கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் எச்சரிக்கையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இலங்கை ஒருவர் பலியானமை தொடர்பிலும் கடந்த தினத்தில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த இலங்கை அவதானத்துடன்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025